News Just In

5/03/2022 09:04:00 PM

இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மைதானத்தில் பெருநாள் தொழுகை!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த திடல் மைதான பெருநாள் தொழுகை ஏற்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் ஏறாவூரில் செவ்வாய்க்கிழமை 03.05.2022 இடம்பெற்றது.

அகில இலங்கை தௌஹீத் ஜமா அத்தினரால் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மைதானத் தொழுகைக்காகவென ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர்.

நிகழ்வில் அகில இலங்கை தௌஹீத் ஜமா அத் அமைப்பு ஏறாவூர் கிளையின் மௌலவி ஏ.ஆர்.எம். றிஸ்வான் எம்.ஏ. (ஷர்கி) பெருநாள் தொழுகையையும் பிரச்சாரத்தையும் நிகழ்த்தினார்.

கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக நோன்புப் பெருநாள் தினமான வெள்ளிக்கிழமையன்று 14.05.2021 பள்ளிவாசல்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. அதேவேளை வழமையாக பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படும் திடல்களும் மைதானங்களும் கூட பூட்டப்பட்டிருந்தன.

சரித்திரத்தில் முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் தினத்தன்று நாடு இவ்வாறு சன நடமாட்டமின்றி வெறிச்சோடியது அதுதான் முதல் தடவை என்று மூத்தோர் தெரிவித்திருந்னர்.

.எச்.ஹுஸைன் 

No comments: