News Just In

5/22/2022 05:39:00 PM

இந்தோனேசியாவின் உயர்ஸ்த்தானிகராலய அதிகாரிகளுடனான சந்திப்பு!

இந்தோனேசியாவின் உயர்ஸ்த்தானிகராலய அதிகாரிகளுடனான சந்திப்பினை இளைஞர் பாராளுமன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்பு அமைச்சர் ஆர்ஆ.அஸீம் மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது இளம் சமூகத்தினரின் கல்வி, கலாச்சார, விளையாட்டு மற்றும் தொழிநுட்ப அறிவுகள் விருத்திசெய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பானது இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார அமைச்சர் அஹமத் சாதிக் மற்றும் களுத்துறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முப்தி அவர்களோடும் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் தமிழ்பேசும் மக்களின் இராஜதந்திர நகர்வுகளை விருத்திசெய்யும்முகமாக இளம் சமூகத்தின் மத்தியில் இராஜதந்திர கல்விமுறைகள் மாதிரி ஐக்கிய நாடுகள் நிகழ்வுகள் மூலம் அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களினால் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இறுதியில் இலங்கை இளைஞர்களின் மத்தியில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் முகமாக செயலமர்வுகள் மற்றும் நிகழ்வுகளை முழுமையாக செய்வதற்கும் அதிகாரிகளினால் வாக்குறுதியளிக்கபட்டது. அத்தோடு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது செயற்பாடுகள் தொடர்பான முழுமையான புரிதல்களை அதிகாரிகள் வழங்கியிருந்தனர்.

இறுதியாக பல வேலைத்திட்டங்களிலும் கிழக்கு மாகாண இளம் சமூகத்தினையும் இணைத்து செயற்படும் இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார அமைச்சர் அஹமத் சாதிக் மற்றும் களுத்துறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முப்தி அவர்களுக்கும் தனது நன்றிகளை ஆர்ஆ.அஸீம் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments: