News Just In

5/09/2022 06:32:00 AM

அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போராட்டக்காரர்கள்!

முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று மலர்வளையம் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்குனகொலபெலஸ்ஸவில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு முன்பாகவே இவ்வாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்த்தாலுக்கு ஆதரவாக அங்குனுகொலபெலஸ்ஸ நகரிலிருந்து கறுப்புக்கொடி ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்ற சிலர் முன்னாள் அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் இவ்வாறு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

No comments: