News Just In

5/10/2022 02:04:00 PM

புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரியின் வீட்டின் மீது தாக்குதல் ; பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்


புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீடு மற்றும் அலுவலகங்கள் நேற்று ( 09) இரவு இனந்தெரியாதவர்களினால் அடித்து நொருக்கி தீக்கரையாக்கப்பட்டுள்ளது.



புத்தளம் வான் வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோக பூர்வமான இல்லம் மற்றும் அலுவலகங்கள் மீதே இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.



குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது வாகங்கள் மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் பலக்கோடி ரூபாய் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் இன்று (10) காலை புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் குறித்த சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



No comments: