News Just In

5/08/2022 06:56:00 AM

இலங்கையில் 15 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் அபாயம்!

எதிர்காலத்தில் 15 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்தார்.

அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமடைந்துள்ளதாகவும், அந்நியச் செலாவணி கையிருப்பு 50 மில்லியன் டாலருக்கும் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார். எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்வது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன் மின்சார விநியோகம் பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு நாட்டில் நிலையான அரசாங்கமொன்று முதலில் உருவாக்கப்பட வேண்டுமென அவர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.

No comments: