News Just In

4/27/2022 07:02:00 PM

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து வீட்டுக்கு தீ வைத்த மனைவி!

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, ஆத்திரமுற்ற மனைவி வீட்டுக்கு தீ வைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் , ஹிங்குராங்கொட, உல்பத்வெவ பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து வீட்டிலுள்ள புடவைகள் மற்றும் ஏனைய பொருட்கள் ஒரு அறைக்குள் போட்டு , அப்பெண் தீ வைத்துள்ளார். பெண்ணின் செயலால் வீட்டிலுள்ள தையல் இயந்திரம் மற்றும் தளபாடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: