உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரில் ரஷ்ய துருப்புக்கள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படுவது குறித்து ஆராயப்போவதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் தெரிவித்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை அன்று, உக்ரைன் அசோவ் பகுதியில் உள்ள படைப்பிரிவு மீது நடந்த தாக்குதலில், மூன்று ராணுவ வீரர்கள் 'விஷத்தன்மை கொண்ட பொருளால்' காயமடைந்ததாக கூறியுள்ளனர்.
ஆனால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கவில்லை.
ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால், அது இந்த போரை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன.
அத்தகைய தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டால், கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் அந்நாடுகள் உறுதி அளித்துள்ளன.
No comments: