News Just In

4/27/2022 06:43:00 PM

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவித்தல்!

எதிர்வரும் 3 நாட்களுக்கு மூன்றரை மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அவ்வாறே, கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின் துண்டிப்பு இடம்பெறுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments: