News Just In

4/15/2022 10:52:00 AM

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் பணிகளுக்கு திரும்ப விசேட பேருந்து சேவை முன்னெடுக்க திட்டம்!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் பணிகளுக்கு திரும்ப விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இன்றைய தினம் முதல் இந்த விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

சுமார் 200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்னஹன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அளவில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: