உலகம் முழுவதும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஹாக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஹேக்கர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான தகவல்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது நிலவும் பரபரப்பான சூழ்நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் குழப்பமானதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது. எனவே, தற்போது அது குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் மிகவும் ஆபத்தான கணினி ஹேக்கர் குழுவான "அனானிமஸ்' குழு கோட்டாபய ராஜபக்ஷவை அச்சுறுத்தி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரச தலைவர் 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்துவிட்டு புதியவர்களிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு செய்யாவிட்டால் ராஜபக்ஷ குடும்பம் பற்றிய அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்த அனானிமஸ் குழு உலகின் பிரபல தலைவர்களின் மறைந்த சொத்துக்களை வெளியிட்ட குழுவாக கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் பண்டோரா பேப்பர்ஸ், பனாமா பேப்பர்ஸ், விக்கிலீக்ஸ் பற்றிய ஆச்சரியமான தகவல்களை குழு வெளியிட்டது. உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யப் படையினரின் தகவல்கள், பெயர்கள், புகைப்படங்கள் போன்றவற்றை அந்தக் குழுவினர் ஏற்கனவே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: