News Just In

3/19/2022 02:49:00 PM

புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றமே நியமிக்கும்! அமைச்சர் தகவல்!


எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கூட இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அத்துடன், அவர் பதவி விலகினால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றமே நியமிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினமே பதவியை விட்டு வெளியேறினாலும், நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல முடியாது.

புதிய ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றமே நியமிக்க முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் கூட, எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.

எனவே, அதிகார மாற்றம்கோரி கூச்சல் போடுவதில் பயன் இல்லை. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மரணத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்படவில்லை, ஜனாதிபதி நியமிக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக, நாடாளுமன்றம் டி.பி.விஜேதுங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தது, இதன் பின்னரே அவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: