News Just In

3/17/2022 04:26:00 PM

தேர்தல் இன்றி ஜனாதிபதியாகும் பசில்?



ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது இலங்கையின் ஜனாதிபதியாக பதவிக்கு வர பசில் ராஜபக்சவும் அவருக்கு நெருக்கமான தரப்பினரும் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்டும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“நாட்டில் நிலவும் நெருக்கடியை உச்சமடைய செய்யும் ஒரு சந்தர்ப்பத்தில் அதனை தாங்க முடியாது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை கைவிடுவார் என நம்புகிறேன்.

அத்துடன் பிரதமர் தற்போது நல்ல நிலைமையில் இல்லை. இதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மக்களின் கருத்தை அறியும் தேர்தலுக்கு செல்லாமல் ஜனாதிபதியாக பதவிக்கு வருவதற்கு பசில் ராஜபக்ச திட்டமிட்டு வருகிறார்.

ஜனாதிபதி பதவி விலகினால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் ஒருவர் ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியும். ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள். அவர்கள் பசில் ராஜபக்சவையே ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். அப்போது பசில் ராஜபக்ச தேர்தல் இன்றி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

இரட்டை குடியுரிமை பெற்றவரிடம் நாட்டின் ஜனாதிபதி பதவி செல்லும். அவரிடம் இருக்கும் திட்டம் அதுதான். ராஜபக்ச சகோதரர்களுக்கு இது புரிந்தும் புரியாதவர்கள் போல் இருக்கின்றனர். அது சகோதர பாசம். ஏனைய ராஜபக்ச சகோதரர்கள் போன்றவர் அல்ல பசில் ராஜபக்சஎன்றார் 

No comments: