News Just In

3/14/2022 09:08:00 AM

அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாளை போராட்டம் !


அரசாங்கத்துக்கு எதிராக நாளை (செவ்வாய்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு போராட்டமொன்றை கொழும்பில் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது .

பொது மக்களின் தற்போதைய பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதிலும், அடுத்த மாதத்துக்குள் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அரச தலைவருக்கு சவால் விடுக்கும் நோக்கில் இந்த போராட்டம் அமையவுள்ளது .

அதேவேளை இலங்கையின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிகையை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments: