News Just In

3/26/2022 04:41:00 PM

பிரதான உலக காசநோய் தினத்தின நிகழ்வு!



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
24.03.2022 உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிழகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அலுவலகம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது காச நோயில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகப் பகுதியில் இருந்து பிரதான வீதி வழியாகவும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கோறளைப்பற்று மத்தி மற்றும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த பேரணியும் ஓட்டமாவடி பிரதான வீதி வழியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த பேரணியும் வந்தடைந்து விழிப்புணர்வும் செய்யப்பட்டது.

'காசநோய் என் வாழ் நாளில் இல்லாது ஒழிப்போம் ' காசநோய் பயப்படக்கூடிய நோயல்ல, காசநோயிலிருந்து பாதுகாப்பது இலகு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர். காச நோயில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பான அறிவித்தல் ஒலி பெருக்கி சாதனத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது.

ஊர்வலத்தின் இறுதியில் வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காசநோயின் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு உரைகள் அதிதிகளாக கலந்து கொண்ட வைத்தியர்களினால் உரையாற்றப்ட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன், காசநோய்க்கான விசேட வைத்திய நிபுணர் நாலங்க கொடவெல, மார்பு தொற்று நோய் பொறுப்பதிகாரி வைத்தியர் ஆரனி ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரீ.சன்ஜீவ் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் திருமதி எஸ்.தயாழினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





No comments: