News Just In

3/14/2022 01:16:00 PM

ஜேர்மன் நட்புறவு ஆரம்ப பாடசாலைக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்.!



நூருல் ஹுதா உமர்
குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பினால் நிந்தவூர் கமு/ ஜேர்மன் நட்புறவு ஆரம்ப பாடசாலைக்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு இன்று (14) திங்கட்கிழமை காலை பாடசாலை முன்றலில் நடைபெற்றது.

அரச காரியாலயங்கள், பாடசாலைகள், மதஸ்தலங்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றஸ்மி நிந்தவூர் கமு/ ஜேர்மன் நட்புறவு ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்காக இவ்வேலைத்திட்டத்தை பாடசாலை நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்.

நிந்தவூர் கமு/ ஜேர்மன் நட்புறவு ஆரம்ப பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். ஹிதாயத்துள்ளா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எம். நஜீப், அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ. எல். என். ஹுதா, பாடசாலை பிரதியதிபர் எம். ஷஹீத், அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பின் பிரதேச காரியாலய உத்தியோகத்தர்களான மௌலவி ஏ.வி.எம். சிப்லி (நஹ்ழி), எம்.எச். இல்யாஸ் பாடசாலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





No comments: