News Just In

3/17/2022 12:39:00 PM

உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!


உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தநிலையில் குறித்த தீர்ப்பை உக்ரைன் வரவேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும் எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதல்கள் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments: