இன்று (23.01.2022) அஸ்பால்ட் இடப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு ரயில்வே குறுக்கு வீதியினை கெளரவ மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் கெளரவ மாநகர உறுப்பினர்கள் சகிதம் பார்வையிட்டனர்.
இதன்போது, விரைவில் வீதிக்கான மத்திய கோட்டினை அமைத்தல், மின்குமிழ் பொருத்துதல் மற்றும் நிழல் தரும் மரங்கள் நட்டு வீதியை அழகுபடுத்தல் போன்ற வேலைகளை நிறைவு செய்த பின்னர் உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்கு இவ்வீதியானது வழங்கப்படவுள்ளதாக கெளரவ மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
No comments: