News Just In

1/06/2022 06:42:00 AM

நாட்டில் சுகாதாரத்துறை குறித்து முறைப்பாடுகளை தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நாட்டில் சுகாதாரத்துறை குறித்து முறைப்பாடுகளை தெரிவிக்கவும் ஆலோசனைகள் மற்றும் கவலைகளை முன்வைக்கவும் பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (06-01-2022) முதல் “சுவ செவன” என பெயரிடப்பட்ட இந்த சேவை செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுமக்கள் 1907 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அது மாத்திரமன்றி பொதுமக்கள் 0707907907 என்ற எண்ணிற்கு வட்ஸ்அப் மற்றும் வைபர் செயலியூடாகவும் முறைப்பாடுகளை அல்லது ஆலோசனைகளை தெரிவிக்க முடியும்.

No comments: