News Just In

1/05/2022 06:26:00 AM

தேசிய காங்கிரஸ் சார்பில் மூதூர் பிரதேச சபைக்கு சுழற்சி முறையில் வை.எஸ்.முஹம்மட் சிஹான் நியமனம்!

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட வை.எஸ்.முஹம்மட் சிஹான் மூதூர் பிரதேச சபை உறுப்பினராக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் சிரேஷ்ட பிரதி தலைவர் வைத்தியர் ஏ. உதுமாலெப்பை, தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.முஹம்மட் ஸியா, மூதூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான ஜே.எம்.சுக்ரி, எஸ்.டீ ஜஹ்பர், திருகோணமலை மாவட்ட தேசிய காங்கிரஸின் பொருளாளர் எஸ்.நபீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைக்கு கிடைத்த ஆசனத்தை வருடம் ஒருவருக்கு என்ற ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் வாக்குறுதிக்கு அமைய மூதூர் பிரதேச சபை உறுப்பினராக இருந்துவந்த தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்த எஸ்.டீ . ஜௌபர் அண்மையில் தனது பதவியை தாமாக முன்வந்து இராஜினாமா செய்திருந்தார். அந்த வெற்றிடத்தை நிரப்ப புதிய உறுப்பினராக வை.எஸ்.முஹம்மட் சிஹான் மூதூர் பிரதேச சபைக்கு நியமிக்கப்பட்டு இன்று கிழக்கு வாசலில் வைத்து சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

நூருல் ஹுதா உமர்

No comments: