News Just In

1/11/2022 06:23:00 AM

மட்டக்களப்பு நகரில் விசேட தடுப்பு ஊசி ஏற்றும் பணிகள் இன்று நடைபெற உள்ளது!

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இதுவரையில் ஏதேனும் கொரோனா தடுப்பு ஊசிகளை பெற்று கொள்ளாதவர்களுக்கு மட்டக்களப்பு நகரில் விசேட தடுப்பு ஊசி ஏற்றும் நிலையங்கள் மூலம் தடுப்பு ஊசி ஏற்றும் பணிகளை சுகாதார திணைக்களம் இன்று (11.01.2022) செயல்படுத்துகின்றது,

இதற்கமைய இன்று மட்டக்களப்பு நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மாமாங்கேஸ்வரர் வித்யாலயம், கருவப்பங்கேர்ணி, சுகாதார வைத்திய நிலையம் புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம், சத்துருக்கொண்டான் சுகாதார வைத்திய நிலையம் ஆகிய நான்கு விசேட கொரோனா தடுப்பூசி மத்திய நிலையங்களில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற இருப்பதாக மட்டக்களப்பு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி டி.கிரிசுதன் அறிவிக்கின்றார்.

இதன்படி இதுவரையில் ஏதேனும் தடுப்பூசிகள் பெ ற்றுக்கொள் ளாதவர்கள் இந்த விசேட தடுப்ப பூசி ஏற்றும் நிலையங்களில் விசேட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்படுகின்றது.

இதன்படி மாமாங்கம் ,கூழாவடிகிழக்கு, திசை வீரசிங்கம் சதுக்கம் ஆகிய கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்திலும், கருப்பந்கேர்ணி,ஜெயந்திபுரம் ,இருதயபுரம் மேற்கு ஆகிய பிரிவில் உள்ள மக்களுக்கு கருவப்பன்கேர்ணி சுகாதார வைத்திய நிலையத்திலும், புதுநகர்திமிலைதீவுதிருப்பெருந்துறை ஆகிய கிராமசேவகர் பிரிவில் உள்ள மக்களுக்கு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும், சத்துருக்கொண்டான் பனிச்சையடி ஆகிய கிராமசேவகர் பிரிவில் உள்ள மக்களுக்கு சத்துருக்கொண்டான் சுகாதார வைத்திய நிலையத்திலும் இந்த விசேட தடுப்பு ஊசி ஏற்றும் பணிகள் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்

No comments: