இன்று ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்றைய தினத்தில் இயேசு பாலகனை தேவாலயத்திற்கு ஒப்புக்கொடுத்த தினத்தை கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
பிறக்கும் இப்புதிய ஆண்டில் நாட்டின் வறுமையும், கொரோனா தோற்றும் ஒழிய வேண்டும் என யாவரும் பிரார்த்திப்போம். கொரோனா பரவல் நாட்டை அச்சுறுத்தும் இவ்வேளையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் ஆடம்பரங்களை தவிர்த்து சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என இத்தருணத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
No comments: