News Just In

11/07/2021 06:41:00 AM

குடும்பமொன்றுக்கு ஒரு நாளைக்கு அரைபாதி தேங்காய் போதுமாம்! - கலாநிதி சாரங்க அழகப்பெரும

சரியான முறையில் தேங்காயை பயன்படுத்தினால் குடும்பமொன்றுக்கு நாளொன்றுக்கு அரைபாதி தேங்காய் மட்டுமே போதுமானது என தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்நாட்டு தேங்காய் நுகர்வில் 30% வீதம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் வருடாந்தம் விளையும் தேங்காய் அறுவடையில் 70 வீதம் உள்நாட்டு பாவனைக்காகவே பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். கையால் பிழிந்தால் 20-30% தேங்காய்ப்பால் கிடைத்தாலும், 50% தேங்காய்ப்பால் கிறைண்டரில் அரைத்தால் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

No comments: