இராணுவ அதிகாரிகளை அமைச்சுக்களின் செயலாளர்களாக உயர் பதவிகளில் அமர்த்தியதன் விளைவாகத்தான் இலங்கை தற்போது இந்த பொருளாதார சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளது என டெலோ அமைப்பினுடைய உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான குருசாமி சுரேந்திரன்(Gurusamy Surendran) தெரிவித்துள்ளார். லங்காசிறீயின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கம் தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஐநா பிரேரணைக்கான அணுசரணையை வழங்க வேண்டும். இனப்பிரச்சினை மற்றும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை காண வேண்டும். அத்துடன் இன ஒற்றுமையைக் கொண்டு வந்தால்தான் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத இனவாத, மத வாதத்தை தூண்டி விட்டு ஆட்சியில் இருந்து குளிர்காய நினைத்ததன் பாரிய தாக்கத்தையே தற்போது அரசாங்கம் எதிர்கொண்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: