News Just In

11/03/2021 06:30:00 AM

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அமையவுள்ள பிரம்மாண்ட ஹோட்டல்!

இலங்கையின் முதலாவது விமான நிலைய ஹோட்டல் கட்டுநாயக்கவில் உள்ள விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் வளாகத்திற்குள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பு சர்வதேச விமான நிலைய ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) இது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக கொழும்பு சர்வதேச விமான நிலைய ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 18.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் என்றும், இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2022ம் ஆண்டளவில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை அடிப்படையாகக் கொண்ட ஹோட்டல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விரிவாக்கும் கொள்ளளவிற்கு பெறுமதி சேர்ப்பை வழங்க உள்ளது.

இந்த ஹோட்டல் 100க்கும் மேற்பட்ட அறைகளுடன் நான்கு நட்சத்திர வசதிகளை வழங்கும், மேலும் இதில் விசாலமான பிரதான குளம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா மற்றும் பணியாளர் ஓய்வறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஹோட்டல் பல உணவகங்களைக் கொண்டிருக்கும், இவை அனைத்தும் பசுமையான வெப்பமண்டல சூழலுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டிடக்கலை வடிவமைப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் ஜப்பானிய கூட்டு நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: