News Just In

10/25/2021 06:58:00 PM

பாடசாலை நிறைவடைந்த நிலையில் கோட்டை புகையிரத நிலய முன்பாக போராட்டத்தில் குதித்த அதிபர் - ஆசிரியர்கள்!

கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின. இன்றைய தினம் பாடசாலை ஆரம்பித்த போதிலும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கைகளை முடித்ததன் பின்னர் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.


சுபோதினி குழு அறிக்கைக்கு அமைய சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

No comments: