News Just In

10/20/2021 09:39:00 AM

ஓட்டமாவடியில் மீலாத் விழா கொண்டாட்டம்


முஸ்லீம்களின் இறுதித் தூதர் முஹம்மது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி மீலாதுந் நபி தினக் கொண்டாட்ட நிகழ்வும் சர்வமத பிராத்தனையும் இன்று செவ்வாய்க்கிழமை (19.10.2021) ஓட்டமாவடி அறபா நகரில் இடம் பெற்றது.

இமாம் ஜஃபர் ஸாதிக் தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் ஜயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் மௌலவி வை.எல்.எம்.றிஸ்வி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மைலம்கரைச்சை மஹிந்தா ராமாதிபதி கடுகஸ்தோட்டை மஹிந்தலங்கார ஹிமி, வாழைச்சேனை கைலாயப்பிள்ளையார் பிரதம குரு சிவஸ்ரீ எஸ்.கே.சசிவர்ணம் சர்மா, இமாம் ஜஃபர் ஸாதிக் தொண்டர் அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எல்.ரீ.எம்.ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டு பிராத்தனைகளை வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் பிரதேச பாடகர்களினால் இஸ்லாமிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டன.







No comments: