News Just In

9/15/2021 04:23:00 PM

மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு சுகாதார துறையினர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்...!!

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரோனா தடுப்பூசி பெறாத பொது மக்களுக்கு சுகாதார துறையினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.


30 தொடக்கம் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசியை இதுவரை பெறத்தவறியவர்களுக்கான சந்தர்ப்பத்தினை வழங்குவதற்காக இன்று(15) மற்றும்  16 , 17ம் திகதிகளில் பின்வரும் நிலையங்களில் தடுப்பூசியை ஏற்றுவதற்கான  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


1. தொழில்நுட்ப கல்லூரி, மஞ்சந்தொடுவாய்


2. சிவானந்தா தேசிய பாடசாலை


3. மாநகர மண்டபம், திசவீரசிங்கம் சதுரக்கம்


4. கொக்குவில் விக்னேஷ்வரா வித்தியாலயம்

மேலே குறிப்பிடப்பட்ட இடங்களில் பொருத்தமான இடத்திற்கு சென்று எதிர்வரும் 15, 16 மற்றும் 17ம் திகதிகளில் தடுப்பூசியை   பொது மக்கள் ஏற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: