News Just In

9/04/2021 04:23:00 PM

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 5000 ரூபாய் நிவாரண பொதி வழங்கி வைப்பு...!!


(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் மாவட்ட, பிரதேச சம்மேளனங்களில் உள்ள பிரதிநிதிகளுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு இன்று காலை சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலியின் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த காலங்களில் கொரோணா தொற்றில் பாதிக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த குடும்பங்களில் வசிக்கும் மாவட்ட, பிரதேச சம்மேளனங்களில் அங்கத்துவம் வகிக்கும் இளைஞர்களுக்கே இந்த 5000 ரூபாய் மதிப்புள்ள உலருணவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டவ்லியு.ஏ.ஜீ.எஸ். தமயந்தி, அம்பாறை இளைஞர் மத்திய நிலைய பொறுப்பதிகாரி அஜித் சேனவிரத்ன, கல்முனை வடக்கு உப பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி டீ. மோகன்ராஜ், நிஸ்கோ பணிப்பாளர் சபை முன்னாள் பணிப்பாளர் யூ. எல்.என். ஹுதா உமர், தேசிய சம்மேளன பிரதிநிதி சிப்னாஸ் அஸீஸ் உட்பட இளைஞர், யுவதிகள் பலரும் கலந்து கொண்டனர்.





No comments: