யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை கல்கேணி எனும் இடத்தில் வைத்தே இச் சம்பவம் நேற்று (4) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேளாண்மை அறுவடையை முடித்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான வாகனேரி - பொட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய சின்னத்தம்பி வேலுப்பிள்ளை என்பவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நடந்த இடத்திற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் பொலிஸார், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உடலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.
மரணமடைந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: