News Just In

8/30/2021 01:30:00 PM

மகிழ்ச்சியடைந்த இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மஞ்சள் நிற சிலிண்டர் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 29.08.2021 கேஸ் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் பரவியதையடுத்து இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் கேஸ் வந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து எரிவாயு விற்பனை செய்யும் கடைகளோடு தொடர்பு கொண்டால் இன்னமும் கேஸ் வரவில்லை என்ற தகவல் கடைக்காரர்களால் தெரிவிக்கப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனரர்.

இதுபற்றி விசாரித்ததில் நிரப்பப்பட்ட மஞ்சள் நிற சிலிண்டர் எரிவாயு மீண்டும் விற்பனைக்கு வந்து விட்டபோதிலும் மாதாந்தக் கடன் அடிப்படையில் கடைகளில் சாமான்கள் வாங்குவோருக்கு கடைக்காரர்கள் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவில்லை என்றும் உடனடிக் காசு கொடுத்து வாங்குபவர்களுக்கே எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேபோன்று சில பிரபல்யமான பால் மா தயாரிப்பு நிறுவனங்களின் பால் மா பக்கெற்றுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் விற்பனைக்கு வந்துள்ளபோதிலும் அவை கடைக்காரர்களால் மாதாந்த கடன் அடிப்படையில் சாமான்கள் கொள்வனவு செய்வோருக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்திருக்கின்றது.

No comments: