மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் இன்று மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியலய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று காலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் உள்ள விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு காலை 9.30 மணி தொடக்கம் 11.30மணி வரையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு கடலில் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டமை குறித்து தம்மிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடாகவே இவ்வாறான விசாரணைகள் இடம்பெற காரணமாக இருக்கலாம் என இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து மூடப்பட்ட கோப்பினை மீழவும் திறந்து விசாரணை செய்வது ஊடகவியலாளர்களை பயமுறுத்தும் செயற்பாடாக இருக்கின்றது ஊடகவியலாளர்கள் சுதந்திரமான தமது கடமையினை செய்யும் நிலைமையினை ஏற்படுத்த ஜனாதிபதி முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாகா மட்டககளப்பில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பாக தன்னை இலக்கு வைத்து விசாராணைகள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது இது தனது ஊடக சுகந்திரம் பறிக்கப்பட்டதுக்கு ஒப்பான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: