News Just In

7/19/2021 06:38:00 AM

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்- கல்குடா சிகையலங்கார சங்கத்தினர் சந்திப்பு...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
வரையறுக்கப்பட கல்குடா தொகுதி சிகையலங்கார சங்கத்தினர் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபருடன் விசேட சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டார்.

தவிசாளர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (16) ஆம் திகதி சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.அஸ்பீர் தலைமையில் இச் சந்திப்பு இடம்பெற்றது.

சிகையலங்கார தொழிலில் தாம் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சங்க உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

சிகையலங்கார சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை எதிர்வரும் காலங்களில் கவனத்தில் கொண்டு நிவர்த்தி செய்து தருவதாக தவிசாளர் வாக்குறுதி வழங்கினார்.

அத்துடன், கொரோனா காலப்பகுதியில் பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கிய சங்க உறுப்பினர்களுக்கு தனது நன்றிகளை தவிசாளர் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் எம்.ஆர்.எம்.சனூஸ் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





No comments: