News Just In

7/27/2021 09:48:00 AM

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க நடவடிக்கை...!!


இலங்கையில் சிறுவர்களை வேலைகளுக்கு அமர்த்த முடியுமான ஆகக்குறைந்த வயதெல்லையை 18 வயதாக உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தயாரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டிருந்த சிறுமி எரிகாயங்களுடன் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வயது குறைந்த சிறுவர்களை வேலைகளுக்காக அமர்த்துவது தொடர்பாக சமூகத்தில் விவாதங்கள் இடம்பெறுகின்றன

இவ்வாறான சம்பவங்களின் அடிப்படையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க, ஆகக் குறைந்த வயதெல்லையை 18 ஆக உயர்த்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மேலும் தெரிவித்தார்.

No comments: