இதன்போது புன்னக்குடாவில் அமையவிருக்கும் ஆடைக் கைத்தொழில் பூங்காவிற்கு விஜயம் செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அப்பகுதியைப் பார்வையிட்டதுடன், புன்னக்குடா கடற்கரை ஓரமாக பாசிக்குடா வரைக்கும் அமையவிருக்கும் வீதி தொடர்பாகவும் இதன் போது ஆராய்ந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் விமான போக்குவரத்தினை இலகுபடுத்துதல், தரைவழிப்பாதைகளை ஏற்படுத்துவதன் ஊடாக சுற்றுலாப்பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவை தொடர்பாக கலந்துரையாடி, நேரில் சென்று பார்வையிடுவதற்காகவே அமைச்சர் குறித்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தில் இராஜாங்க அமைச்சர்களான டீ.வீ.சனகா, எஸ்.வியாழேந்திரன், மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியின் ஊடாக மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதுடன் இதன் ஊடாக தனிமனித வருமானத்தை மேம்படுத்த தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டதாக சுற்றுலாத்துறை அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார்.
No comments: