News Just In

7/27/2021 12:01:00 PM

வாடகைக்கு வாகனங்களை பெற்று அவற்றை விற்பனை செய்து வந்த நபர் கைது...!!


வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து வாகனங்களை பெற்று அவற்றை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஹோமாகம பகுதியில் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றிடம் இருந்து குறித்த நபர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனம் ஒன்றை போலி ஆவணங்களை சமர்ப்பித்து இரண்டு வாரங்களுக்கு பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சந்தேகநபருக்கு எதிராக 48 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

No comments: