கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை கொண்டு செல்லும் மஜ்மா நகர் வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம், சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த வீதியை கொங்ரீட் இட்டு அமைக்க கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து பத்து இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் ஏ.எம். நெளபர் தெரிவித்தார்.
No comments: