News Just In

7/19/2021 04:04:00 PM

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு...!!


நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடத்துக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தது.

இந்நிலையில் குறித்த விண்ணப்ப முடிவு திகதி ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments: