சந்தேக நபர் ஹபுகல பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் பேஸ்புக் ஊடாக 16 வயது யுவதி ஒருவருடன் பேசிப் பழகி, அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், அந்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
பின்னர் குறித்த புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவிட்டு விடுவதாக யுவதியை மிரட்டி பணம் வாங்கியுள்ளார்.
இளைஞரின் மிரட்டலுக்கு பயந்த பாதிக்கப்பட்ட யுவதியும், தனது தந்தையின் பணத்தை திருடி அவருக்கு கொடுத்து வந்துள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பணத்தை காணவில்லை என மகளிடம் தந்தை கேட்ட போது , தனக்கு நடந்த எல்லாவற்றையும் தந்தையிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், அதனையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: