News Just In

6/19/2021 08:38:00 AM

களுதாவளை சீடா (SEEDA) அமைப்பினால் வாகரையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு...!!


நாட்டில் கொவிட் - 19 காரணமாக அமுலிலுள்ள நடமாட்டத் தடை காரணமாக அன்றாடம் நாட்கூலி வேலை செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தமது குடும்பங்களைப் பாதுகாத்துவரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனை கருத்திற்கொண்டு களுதாவளை சீடா (SEEDA) அமைப்பினால் கொரோனா இடர் காரணமாக தொழில்களை இழந்து வீட்டில் முடங்கியிருக்கும் வாகரை, புச்சாங்கேணி மக்களுக்கு நேற்றைய தினம்(18) உலருணவு பொதிகள் நிவாரணமாக வழங்கி வைக்கப்பட்டது.

நாடுபூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையினால் தொழில்களை இழந்து வீட்டில் முடங்கியிருக்கும் வாகரை, புச்சாங்கேணி கிராம மக்களுக்கு குறித்த பகுதி பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் அக்கிராமத்தின் கிராமசேவகர் முன்னிலையில் புச்சாக்கேணி கிராமசேவை உத்தியோகத்தரின் அலுவலகத்தில் வைத்து குறித்த உலர் உணவுப் பொதிகள் நிவாரணமாக வழங்கி வைக்கப்பட்டன.

இத்துடன் குறித்த அமைப்பானது பல்வேறு சமூக பணிகளை மக்கள் நன்மை கருத்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.







No comments: