News Just In

6/16/2021 12:37:00 PM

பல்பொருள் அங்காடிகளில் இருந்து ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு அனுமதி...!!


நாட்டில் பயணத்தடை காரணமாக ஒன்லைன் முறை உட்பட சகல விதமான மதுபான விற்பனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மதுவரி திணைக்களம் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நடமாட்டக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டுள்ளன. இதனிடையே சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர்க்கும் விதமாக இணையத்தளம் ஊடாக சிறப்பங்காடிகள் மூலம் மதுபான விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களத்தினால் நிதியமைச்சிடம் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளரின் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments: