மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட கிராம மக்களுக்கு உலர் உணவு விநியோகம் இடம்பெற்று வருவதாக பிரதேச செயலாளர் வி. தவராஜா தெரிவித்தார்.
முடக்கப்பட்டுள்ள கிராம மக்களின் வீடுகளுக்குச் சென்று நிவாரணப் பொதிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தலைமையில் புதன்கிழமை 16.06.2021 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் மீராவோடை கிழக்கு மீராவோடை மேற்கு மாஞ்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3200 பயனாளிக் குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் விநியோகம் இடம்பெற்று வருகிறது.
வாரத்திற்கு ஒரு பொதி என்ற அடிப்படையில் மொத்தமாக இரு வாரங்களுக்கு இந்தப் பொதிகள் வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் தவராஜா மேலும் தெரிவித்தார்.
No comments: