News Just In

6/15/2021 12:14:00 PM

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு முனைப்பு ஸ்ரீ லங்கா அமைப்பினால் ஒட்சிசன் இயந்திரம் வழங்கி வைப்பு...!!


நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் நிலவும் சில மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நேற்று முனைப்பு ஸ்ரீ லங்கா அமைப்பினால் ஒட்சிசன் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் பெறுமதியான குறித்த அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு தேவையான ஒட்சிசன் இயந்திரமானது சுவிஸ் நாட்டின் முனைப்பு அமைப்பின் நிதி அனுசரணையில் கிளை அமைப்பான முனைப்பு ஸ்ரீ லங்கா அமைப்பினரால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினுடாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளரிடம் நேற்று(14) கையளிக்கப்பட்டது.

குறித்த உபகரணமானது களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு முனைப்பு ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவர் திரு.மா.சசிகுமார், செயலாளர் இ.குகதாசன், பொருளாளர் அ.தயானந்தரவி மற்றும் நிர்வாக உறுப்பினர்களான பிரபாகரன், விவேகானந்தராசா ஆகியோரால் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.












No comments: