News Just In

6/15/2021 11:40:00 AM

9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர அனுமதி...!!


நாட்டில் மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படும், தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் மேம்படுத்துவதற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படுவதும், மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் நிறுவன வகைப்படுத்தலின் கீழ் காணப்படுவதுமான, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிசாவளை, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்ட பொது வைத்தியசாலைகளின் சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமென இனங்காணப்பட்டுள்ளது

அதற்கமைய, அந்நோக்கத்தை அடைவதற்காக குறித்த மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments: