News Just In

6/16/2021 02:59:00 PM

மட்டக்களப்பிற்கு அமைச்சர் பந்துள்ள குணவர்த்தன திடீர் விஜயம்- கள்ளியன்காட்டில் அமையவுள்ள பல்பொருள் விற்பனை நிலையம் தொடர்பில் கலந்துரையாடல்!!


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வர்த்தக துறை அமைச்சர் பந்துள்ள குணவர்த்தன இன்று (16) உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது மட்டக்களப்பு கள்ளியன்காட்டில் அமைந்துள்ள உணவு களஞ்சியசாலைக்கு சென்ற அமைச்சர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி அமையப்பெறவுள்ள “ரஜவாச” பல்பொருள் விற்பனை நிலையம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததுடன், நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

குறித்த களவிஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், வர்த்தக துறை அமைச்சின் உணவு ஆணையாளர் ஜே.கிறிஸ்ணமூர்த்தி, சதோச நிறுவனத்தின் தலைவர் ஆனந்த பீரீஸ், வர்த்தக துறை அமைச்சின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த உணவு களஞ்சியசாலையை முற்றாக கண்காணித்த வர்த்தக துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் கட்ட நிர்மாணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் மக்களின் நன்மைகருதி எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆலோசனைகளையும் வழங்கினார்.











No comments: