டயகம, சந்திரிகாமம் பகுதியில் இருந்து அக்கரபத்தனைக்கு இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடே பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகிய தகவலினை அடுத்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது பசு மாடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் சந்திரகாமம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் கடத்தல் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
இதேவேளை, டயகம பகுதியில் கடந்த 3 நாட்களுக்குள் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதன் போது சந்தேக நபர்களிடம் இருந்து 75 சாராய போத்தல்களும், 570 லீற்றர் கசிப்பும், 325 லீற்றர் கோடாவும், கசிப்பு தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: