News Just In

6/17/2021 12:08:00 PM

விதிமுறைகளை மீறி முன்னெடுக்கப்பட்ட தனியார் கல்வி நிலையத்தில் 36பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


தனிமைப்படுத்தல் விதிகளை மீறி கட்டுக்கஸ்தோட்டை பொலிஸ் பிரிவில், முன்னெடுக்கப்பட்ட கல்வியகத்தின் முகாமையாளர், ஆசிரியர்கள் நால்வர் உட்பட மாணவ, மாணவிகள் 36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அதில், மாணவிகள் 20 பேர், பின்னவல சிகிச்சை மத்திய நிலையத்துக்கும் மாணவர்கள் 16பேரும் ​பொல்கொல்ல சிகிச்சை மத்திய நிலையத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த கல்வியகத்துக்கு வந்துச் சென்ற, ஏனைய மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம் மேலும் ஐந்து மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

No comments: