News Just In

6/17/2021 01:31:00 PM

பயணத் தடைக் காலத்திலும் கிராமிய பாலங்கள் நிருமாணிக்கும் பணிகள் தொடர்கின்றன!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள காலகட்டத்திலும் “இதயங்களை இணைக்கும் கிராமிய பாலங்கள்” திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள கிராமிய பாலங்கள் நிருமாணிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக நிருமாணத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் முனைவளவு கிராமிய பாலம் சுமார் 12 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட தொகையில் நிருமாணிக்கும் பணிகள் கடந்த வருடம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நஸீர் அஹமட்டினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

அனைத்து விதமான அபிவிருத்தி நிருமாணப் பணிகளும் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடைக் காலத்திலும் தங்கு தடையின்றித் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.






No comments: