News Just In

6/16/2021 07:55:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 22483 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, இன்று(2021.06.16) ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்கு அமைய மொத்தமாக 22483 தடுப்பூசிகள் இதுவரை ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

இதில்,
2021.06.08 அன்று 1335 தடுப்பூசிகளும்
2021.06.09 அன்று 3492 தடுப்பூசிகளும்
2021.06.10 அன்று 4320 தடுப்பூசிகளும்
2021.06.11 அன்று 2827 தடுப்பூசிகளும்
2021.06.12 அன்று 4431 தடுப்பூசிகளும்
2021.06.13 அன்று 3532 தடுப்பூசிகளும்
2021.06.14 அன்று 1554 தடுப்பூசிகளும்
2021.06.15 அன்று 776 தடுப்பூசிகளும்
2021.06.16 அன்று 216 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4809 தடுப்பூசிகளும்
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2602 தடுப்பூசிகளும்
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2000 தடுப்பூசிகளும்
கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 864 தடுப்பூசிகளும்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1310 தடுப்பூசிகளும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1394 தடுப்பூசிகளும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2250 தடுப்பூசிகளும்
வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 308 தடுப்பூசிகளும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1974 தடுப்பூசிகளும்
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1100 தடுப்பூசிகளும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1638 தடுப்பூசிகளும்
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 590 தடுப்பூசிகளும்
பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 966 தடுப்பூசிகளும்
வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 678 தடுப்பூசிகளுமாக மொத்தம் 22483 கொரோனா தடுப்பூசிகள் மட்டக்களப்பின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments: