News Just In

6/13/2021 09:30:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 19959 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, இன்று(2021.06.13) ஆறாவது நாளாக மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்கு அமைய மொத்தமாக 19959 தடுப்பூசிகள் இதுவரை ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதில்,
2021.06.08 அன்று 1351 தடுப்பூசிகளும்
2021.06.09 அன்று 3476 தடுப்பூசிகளும்
2021.06.10 அன்று 4321 தடுப்பூசிகளும்
2021.06.11 அன்று 2827 தடுப்பூசிகளும்
2021.06.12 அன்று 4434 தடுப்பூசிகளும்
2021.06.13 அன்று 3550 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3553 தடுப்பூசிகளும்
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2396 தடுப்பூசிகளும்
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1630 தடுப்பூசிகளும்
கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 840 தடுப்பூசிகளும்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1306 தடுப்பூசிகளும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1235 தடுப்பூசிகளும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2250 தடுப்பூசிகளும்
வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 274 தடுப்பூசிகளும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1828 தடுப்பூசிகளும்
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1030 தடுப்பூசிகளும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1544 தடுப்பூசிகளும்
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 590 தடுப்பூசிகளும்
பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 898 தடுப்பூசிகளும்
வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 586 தடுப்பூசிகளுமாக மொத்தம் 19959 கொரோனா தடுப்பூசிகள் மட்டக்களப்பின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: