மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவ தினமான நேற்று இரவு மாவட்ட புலனாய்வு பிரிவினர் பொலிசாருடன் கூளாவடி பிரதேசத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த இளைஞனை பொலிசார் வழிமறித்த போது அவர் மோட்டார் சைக்கிளில் மதுபான போத்தல்களை எடுத்துச் சென்றிருந்த நிலையில் அவரை கைது செய்ததுடன் 100 கால் மதுபான போத்தல்களையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
No comments: